தஞ்சாவூர், ஜூன் 12 –
முதல்வர் மாநில இளைஞர் விருது பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் ரேவதி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்து இருப்பதாவது: சமுதாய வளர்ச்சிக்கு சேவை யாற்றும் இளைஞர்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில் முதல்வர் மாநில இளைஞர் விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 வயது முதல் 35 வயதை வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது ரூபாய் ஒரு லட்சம் ரொக்கமும், பாராட்டு பத்திரமும், பதக்கமும் ஆகியவற்றுடன் வழங்கப்படுகிறது.
இந்த விருதுக்கு 15 வயது முதல் 35 வயது வரை உள்ள ஆண் பெண் விண்ணப்பிக்கலாம். ஏப்ரல் 1, 2025 அன்று 15 வயது நிரம்பியதாகவும் மார்ச் 31, 2026 அன்று 35 வயதுக்குள்ளாகவும், இருத்தல் வேண்டும். கடந்த நிதியாண்டில் (1.4.2025 முதல் 31.3.2026 மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மற்றும் கருத்தில் கொள்ளப்படும். குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருக்க வேண்டும். அதற்கான சான்று இணைக்கப்பட வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் செய்த தொண் டு, கண்டறியப்பட கூடியதாகவும் அளவிடக்கூடியதாகவும் இருக்க வேண்டும். தமிழ்நாடு விளையாட்டு மேம் பாட்டு ஆணையத்தின் இணைய தளமான www.sdat.tn.gov.in மூலம் ஜூலை 6ம் தேதி மாலை 5:45க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் மாவட்ட கலெக்டரின் பரிந்துரைக்கு அனுப்புவதற்கு விண்ணப்பத்தின் 3 நகல்களை தஞ்சாவூர் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரில் அளிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு அன்னை சத்யா விளையாட்டு அலுவலகத்தை 04362-235633, 7401703496 ஆகிய எண்களின் வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.



