திருச்சி, ஏப். 29 –
முசிறி பேருந்து நிலையம் அருகே கார் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதியதில் பெங்களூரைச் சேர்ந்த ராதிகா (40) என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவருடைய கணவர் கணேசன் மற்றும் கார் ஓட்டுநர் கிருஷ்ணன் ஆகியோர் படுகாயமடைந்து முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து முசிறி போலீசார் லாரி ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



