நாகர்கோவில், டிச. 11 –
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிட்டங்கியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணிகளை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான அழகுமீனா, துவக்கி வைத்து ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து அவர் கூறுகையில்: இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 5594 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 4040 கட்டுப்பாட்டு கருவிகளும், 2802 விவிபேட் கருவிகளும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிட்டங்கியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
இதில் 900 வாக்குப்பதிவு இயந்திரங்கள் நேற்று (10.12.2025) விருதுநகர் மாவட்டத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் அனுப்பி வைக்கப்பட்டது. மீதமுள்ள 4694 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 4040 கட்டுப்பாட்டு கருவிகளும், 2802 விவிபேட் கருவிகளும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிட்டங்கியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
கிட்டங்கியில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணிகள் பெல் நிறுவனத்தை சார்ந்த 9 பொறியாளர்கள் கொண்ட குழுவினரால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நேற்று துவக்கி வைக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணியானது காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெற்றது. இவ்வாறு கூறினார்.
நடைபெற்ற ஆய்வில் மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கோதை, உதவி ஆட்சியர் பயிற்சி ராகுல் குமார், நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் காளீஸ்வரி, பெல் நிறுவன பொறியாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டார்கள்.



