மார்த்தாண்டம், செப். 27 –
மார்த்தாண்டம் அருகே உள்ள கோட்டகம் பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரன் (56). விவசாயி. இவரது மகள் கிருஷ்ண வர்ஷா (19). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 23ஆம் தேதி வீட்டில் இருந்து கிருஷ்ண வர்ஷா திடீரென மாயமானார். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் எந்த தகவலும் இல்லை. இது குறித்து ரவீந்திரன் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவி தொடர்பாக விசாரித்து வருகிறார்கள்.


