மார்த்தாண்டம், ஜூன் 24 –
மாத்தூர் பகுதியில் ஆசியாவில் மிக உயரமான காமராஜரால் கட்டப்பட பிரபல சுற்றுலாத் தலமான மாத்தூர் தொட்டி பாலம் அருகே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அனுமதியின்றி கிறிஸ்தவ வழிபாடு கூடம் செயல்பட துவங்கியது. அந்த நேரத்தில் இந்து இயக்கங்கள் சார்பில் 2021 ஆம் ஆண்டு மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அப்போது அங்கு கிறிஸ்தவ வழிபாடு கூடம் செயல்படவில்லை எனவும் அலுவலகம் செயல்பட்டு வருவதாக நீதிமன்றத்தில் எதிர் தரப்பினர் பதில் தகவல் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது அங்கு கிறிஸ்தவ வழிபாடு கூடம் செயல்பட கூடாது அப்படி செயல்பட்டால் அந்த கட்டிடத்தை இடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று அங்கு கிறிஸ்தவ மத பிரச்சாரம் மற்றும் போதனைகள் நடைபெற்றுள்ளது. இதை கண்டித்தும் இந்த கட்டிடத்தை இடிக்க பல முறை போராட்டங்கள் நடத்தியும் விதிமுறைகளை மீறி நீதிமன்ற உத்தரவை மதிக்காத கிறிஸ்தவ வழிபாடு கூட கட்டிடத்தை இடிக்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து திருவட்டாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் இந்து முன்னணி நிர்வாகிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்து முன்னணி மாவட்ட தலைவர் ஆறுமுகம் தலைமையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படும் வரை போராட்டத்தை தொடர போவதாக அறிவித்துள்ளனர்.



