குளச்சல், ஆக. 5 –
கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ் பெற்ற கோயில்களில் ஒன்றான மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. தினம் தமிழகம் கேரளா உட்பட்ட பல பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினம் தோறும் வந்து செல்லும் இந்த கோயில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது.
இந்த கோயில் மேலாளர் செந்தில்குமார் மீது பல முறைகேடு குற்றசாட்டில் ஈடுபட்டு வருவதாக புகார் உள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்க பல முறை புகார்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்காத இந்து அறநிலையத்துறையை கண்டித்து விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் மண்டைக்காடு பகவதி கோயில் முன்பு போராட்டம் நடைபெற்றது.
போலீசார் அனுமதி மறுத்து, விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட தலைவர் பிரதீப் உட்பட்ட 25 மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். போராட்டத்தை தொடர்ந்து கோயில் முன் வாசலை தவிர மற்ற வாசல்கள் மூடப்பட்டு போலீசார் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
போலீசார் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து கோயில் பிரார்த்தனை செய்ய போவதாக விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் தெரிவித்தனர். ஆனால் அதற்கு போலீசார் அனுமதி மறுத்ததை தொடர்ந்து கோயில் முன் மறியல் போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர்.



