திருச்சி, ஏப்ரல் 27 –
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த காரணிப்பட்டியில் குடும்பப் பிரச்சனை காரணமாக காவ்யா (19) என்ற பெண் வெள்ளிக்கிழமை மாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. கொடும்பாளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டபோது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. வளநாடு போலீஸார் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


