முதுகுளத்தூர், ஆகஸ்ட் 01 –
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக முழுவதும் மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்று சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக முதுகுளத்தூரில் பிரச்சாரம் மேற்கொண்டு அவர் பேசியதாவது:
திமுக கட்சி அல்ல கார்பரேட் கம்பெனி ஆட்சி தேவையா குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கட்சி பொறுப்பு.
ஆட்சி அதிகாரத்திற்கு வர முடியும் குடும்ப ஆட்சிக்கு விடையளிக்கும் தேர்தல் தான் 2026. ஊழல் பெருகியது. அரசு அலுவலகங்களில் ஊழல் பெருகியுள்ளது. டாஸ்மாக்கில் 40 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது. திமுகவின் தாரக மந்திரம் கலெக்ஸன், கமிஷன், கரப்ஸன் தான். மேலும் இந்த பகுதியில் வசிக்கும் விவசாயிகள் காவிரி குண்டாறு திட்டம் ரூபாய் 14600 கோடி அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. திமுக அரசு அதனை கிடப்பில் போட்டுவிட்டது. அதிமுக ஆட்சி அமைந்ததும் காவிரி குண்டாறு திட்டம் நிறைவேற்றப்படும். 540 கோடி பயிர் காப்பீடு பெற்றுத் தந்துள்ளோம்.
அதிமுக மதசார்பற்ற கட்சி. இங்கு ஜாதி மதம் கிடையாது. திமுக அரசு 523 வாக்குறுதிகளில் 10% மட்டுமே நிறைவேற்றியுள்ளன. தேர்தல் வருவதால் திமுக பொய்யான வாக்குறுதிகளை கூறி மக்களை ஏமாற்றி வருகிறது. கஜா புயல், கொரோனா பேரிடர் காலத்தில் சிறப்பாக விலைவாசி உயராமல் அதிமுக அரசு சிறப்பாக நடந்தது என்று அவர் இவ்வாறு பேசினார்.
இந்த பிச்சாரத்தில் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ. முனியசாமி, மகளிரணி இணை செயலர் கீர்த்திகா முனியசாமி, கழக எம்ஜிஆர் மன்ற துணை செயலாளரும் முன்னாள் மாவட்ட ஊரட்சி சேர்மனுமான வழக்கறிஞர் மு. சுந்தரபாண்டியன், கமுதி ஒன்றிய கழக செயலாளர் பெருநாளி கே. காளிமுத்து, கமுதி ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், கருமலையான், முதுகுளத்தூர் ஒன்றிய செயலாளர் எஸ்.டி. செந்தில்குமார், ஒன்றிய அவைத் தலைவர் எஸ். கதிரேசன், வார்டு செயலாளர் செல்லயா உள்பட பொதுமக்கள் பலர் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.