விளாத்திகுளம், செப்.15:
தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி, தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர் அவரது நினைவைப் போற்றி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு, விளாத்திகுளம் பகுதி அதிமுக சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. முதலில் அங்குள்ள மார்பளவு எம்ஜிஆர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிமுகவினர், பின்னர் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் விளாத்திகுளம் அதிமுக ஒன்றிய செயலாளர்கள் ராமச்சந்திரன், மகேஷ், பால்ராஜ், தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள் ஆனந்த், மருதுபாண்டி, அதிமுக நிர்வாகிகள் வேல்முருகன், சண்முகசாமி, ஆசைத்தம்பி, மகளிர் அணி நிர்வாகிகள் சாந்தி, ஆறுமுகத்தாய், குமாரத்தாய் உள்ளிட்ட ஏராளமான அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.



