கோவை, ஆக. 25:
கோவை டாக்டர் ஆர்.வி. கலை அறிவியல் கல்லூரியில் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை வலியுறுத்தும் வகையில் ஓணம் திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
விழாவை கல்லூரி முதல்வர் சி.என். ரூபா தொடங்கி வைத்தார். இதையொட்டி மாணவ, மாணவிகள் கல்லூரி வளாகத்தை வண்ணமயமாக அலங்கரித்தனர். மேலும், கேரள பாரம்பரிய உடைகளை அணிந்து, அத்தப்பூ கோலமிட்டு ஓணம் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடினர்.
விழாவில் மேளதாளங்கள் முழங்க, மகாபலி சக்கரவர்த்தியின் வேடமணிந்த மாணவர்கள் அனைவரையும் வரவேற்றனர். தொடர்ந்து மாணவ, மாணவிகள் பாரம்பரிய நடனமாடி விழாவை சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியில் துணை முதல்வர்கள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் கலந்து கொண்டு மாணவர்களை உற்சாகப்படுத்தினர்.



