சென்னை, ஜூன் 22 –
வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை நிறுவனமான வசந்த் அண்ட் கோவின் 149வது புதிய கிளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. சென்னை, பூந்தமல்லியில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன புதிய கிளையை, வசந்த் அண்ட் கோ நிறுவனத்தின் பங்குதாரர் தங்கமலர் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.
திறப்பு விழாவை முன்னிட்டு, ரூபாய் 10,000-க்கு மேல் பொருட்கள் வாங்குபவர்களுக்குதங்க நாணயம், ரூ.50,000க்கு மேல் வாங்குபவர்களுக்கு மிக்ஸி மற்றும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்கள் போன்ற சிறப்புச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தங்களுக்குத் தேவையான எலக்ட்ரானிக்ஸ் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவதற்காகப் பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடன் புதிய கிளையில் அதிகளவில் திரண்டனர்.
புதிய கிளை திறப்பு குறித்து நிறுவனத்தின் பங்குதாரர் தங்கமலர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, வாடிக்கையாளர்களின் நேரடித் திருப்திக்காக எளிய தவணை முறை வசதிகளுடன் இக்கிளை தொடங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். ஆன்லைன் வர்த்தகத்தை விட, வாடிக்கையாளர்களுடன் நேரடித் தொடர்பு கொண்டு தரமான சேவைகளை வழங்குவதே தங்களது நோக்கம் என்றும், அடுத்ததாக ஊத்துக்கோட்டையில் புதிய கிளை திறக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.



