பூதப்பாண்டி, செப்டம்பர் 03 –
பூதப்பாண்டி வனச்சரகம் சார்பாக மாவட்ட வன அலுவலர் பிரசாந்த் உத்தரவுப்படி மெகா பிளாஸ்டிக் கிளினப் நிகழ்ச்சி சுசீந்திரம் பறவைகள் சரணாலயத்தில் வைத்து வனச்சரக அலுவலர் அன்பழகன், சமூக வனச்சர அலுவலர் வெங்கடேசன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சூழியலாளர் சுதாமதி, சுற்றுச்சூழல் உதவி பொறியாளர் ஜினிஷா, பசுமை தோழர் சாம்சன், பேராசிரியை ராதிகா ஆகியோர் பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீமையை குறித்தும் அதனுடைய தீங்கினை குறித்தும் விளக்கினர்.
ஆசிரியை அழகாம்பிக்கை, வனவர்கள் அசோக், ஜான்மிலான், வனக்காப்பாளர்கள் முத்துராமலிங்கம், தீபா, ஆஷிகாசபுராள், ராஜு, வனக்காவலர்கள், பிரபின், புஸ்பராஜா, வேட்டை தடுப்பு காவலர்கள் பிரவின், இந்திரன், மாநகராட்சி கவுன்சிலர் மற்றும் தன்னார்வலர் ஆகியோர் கலந்து கொண்டனர். சுமார் 400 கிலோ எடை கொண்ட கழிவுகளை கல்லூரி தேசியப்படை மாணவர்களும், பள்ளி மாணவர்களும் தன்னார்வமாக சேகரித்தனர். மேலும் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் எனவும் உறுதி மொழி எடுத்தனர்.



