புதுக்கடை, ஜனவரி 31 –
ராமன்துறை பகுதி இனயம் புத்தன்துறையை சேர்ந்தவர் செய்யது அலி (55). இவர் அந்தப் பகுதியில் ஹோட்டல் நடத்தி வருகிறார். கடந்த 27ம் தேதி வழக்கமாக ஹோட்டலுக்கு அவருடைய இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இதை அவரது மகன் ஹக்கீம் என்பவர் பார்த்துள்ளார்.
ஹோட்டல் முடிந்து இரவு வழக்கமாக 10 மணிக்கு வீடு திரும்பும் போது வழக்கமாகும். ஆனால் அன்று வீடு திரும்பவில்லை. பின்னர் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து செய்யது அலியை அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்காததால் அவரது மனைவி நசீரா (46) என்பவர் புதுக்கடை போலீசில் இன்று கணவரை கண்டுபிடிக்க கேட்டு புகார் செய்தார்.
போலீசின் முதற்கட்ட விசாரணையில் செய்யது அலிக்கு கடன் பிரச்சினை இருப்பதாக தெரிய வந்துள்ளது. அவர் கடன் பிரச்சனையால் மாயமானாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


