தஞ்சாவூர், மே 18 –
புதுக்கோட்டை சாலை, குழந்தை ஏசு கம்யூனிட்டி ஹாலில் பீம் அறக்கட்டளை மற்றும் தஞ்சை உறவின் முறை சங்கத்தின் 10ம் ஆண்டு பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் மற்றும் விருது வழங்கும் விழாவிற்கு தஞ்சாவூர் உறவின்முறை சங்க பொருளாளர் பேராசிரியர் முனைவர் இரா.ரெங்க ராஜன் வரவேற்புரையாற்றினார்.
கா.தங்கராஜ், சந்திரமோகன் ராஜா, இரா.கஜேந்திரன், வ.தனசேகர், சண்முகம், இரா.கண்ணதாசன், கர்ணன், அசோக்குமார், முரளிதரன், க.ஆனந்தராஜ், து.அர்ஜுன்ராஜ், காசி.ரவிச்சந்திரன், இளந்தமிழன், சிங்.சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தஞ்சாவூர் உறவின் முறை சங்க தலைவர், ராஜாங்கு தலைமை வகித்தார். சங்க செயலாளர் பேராசிரியர் முனைவர் ரெ.சதாசிவம் தலைமை உரையாற்றினார்.
தஞ்சாவூர் மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குனர் முனைவர் அ.குணசேகரன் வாழ்த்துரையாற்றினார். மதுரை மனித உரிமை செயல்பாட்டாளர் மற்றும் எழுத்தாளர் எவிடன்ஸ் கதிர் அம்பேத்கர் விருது பெற்றார். திருச்சி புற்று நோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் க.கோ.ராஜ்வர்தணன் அயோத்திதாசர் விருது பெற்றார்.
கொட்டங்காடு தமிழக மக்கள் புரட்சி கழகம் மற்றும் அரசியல் தலைவர் அரங்க. குணசேகரன் இரட்டைமலை சீனிவாசன் விருது பெற்றார். விருது பெற்றவர்கள் ஏற்புரையாற்றினார்கள். தஞ்சை உறவின்முறை சங்க பொறுப்பாளர் பேரா.முனைவர் நா.சுரேஷ்பாபு நன்றியுரையாற்றினார்.



