தருமபுரி, ஜூலை 06 –
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை நடப்பதாக காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து பாலக்கோடு காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
பாலக்கோடு அருகே உள்ள காவாப்பட்டி பிரிவு சாலையில் 3 வாலிபர்கள் கையில் பையுடன் சந்தேகம்படும்படியாக நின்று கொண்டிருந்தனர். காவல்துறையினரை கண்டதும் தப்பி ஓடி முயன்றவர்களை மடக்கி பிடித்து விசாரித்ததில், பாலக்கோடு மைதீன்நகரை சேர்ந்த அமீன் (20), புதுபட்டாணியர் தெருவை சேர்ந்த முகமது சல்மான் (26), சான்கான் தெருவை சேர்ந்த பர்வேஸ் அகமது (31) என்பது தெரிய வந்தது.
அவர்கள் வைத்திருந்த பைகளை சோதனை செய்ததில் 150 கிராம் கஞ்சாவை சிறு சிறு பொட்டலங்களாக கட்டி விற்பனைக்காக மறைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது. அவர்களிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர் 3 பேரையும் கைது செய்து தருமபுரி சிறையில் அடைத்தனர்.


