சுசீந்திரம், ஏப். 27 –
பார்வதிபுரம் பகுதியில் பள்ளி வளாகத்திலுள்ள பொருள்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளிலுள்ள பொருட்களை ஒருவர் திருடி செல்கிறார் என்று நிமிர் குழுவுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். நிமிர் குழு அங்கு சென்று பார்த்த போது அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதை அவரது பெற்றோர் மூலம் தெரிந்து கொண்டனர்.
வயதான அவர்களால் அந்த நபரை பராமரிக்க இயலாததால் நிமிர் குழு, நாம் ஒருவர் அறக்கட்டளையை தொடர்பு கொண்டு அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அந்த நபரை மீட்கும் பணியில் பெரும் சிரமம் ஏற்பட்ட போது ஆசாரிபள்ளம் காவல் ஆய்வாளர் அந்த நபரை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கும் வரை உறுதுணையாக நின்று நடவடிக்கை மேற்கொண்டார். அவருக்கும், நிமிர் குழுவுக்கும், நாம் ஒருவர் அறக்கட்டளைக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.


