மார்த்தாண்டம், ஜூலை 14 –
பாரதக் கலாச்சாரப் பேரவையின் சாதனையாளர் விருது வழங்கு விழா மார்த்தாண்டம், வர்த்தக சங்க கட்டடத்தில் வைத்து நடைபெற்றது. இவ்விழாவிற்கு பேரவைத் தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். இவ்விழாவில் ஆன்மீகம், இலக்கியம், சமூகம் சார்ந்து தொண்டாற்றும் புலவர் கு.இரவீந்திரன், பேராசிரியர் செ. சஜீவ் ஆகியோருக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் துணைத்தலைவர் ரெவிந்திரன் அனைவரையும் வரவேற்றார். இந்திய மருத்துவச் சங்கத்தின் முன்னாள் தேசிய தலைவர் டாக்டர் விஜயகுமார், மாநில பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் சிந்து குமார், பணிநிறை துணை வட்டாட்சியர் சிகாமணி, எழுத்தாளர் குமார செல்வா, பைங்குளம் வாசகர் வட்ட தலைவர் முருகன், குமரி அறிவியல் பேரவை அமைப்பாளர் முள்ளஞ்சேரி மு. வேலையன் உள்ளிட்ட பலர் வாழ்த்திப் பேசினர்.
தமிழமுதம் வானொலி இயக்குநர் கீழப்பாவூர் சண்முகைய்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சாதனையாளர்களுக்கு சாதனையாளர் விருது வழங்கி விழாப் பேருரை நிகழ்த்தினார். விருதாளர்களின் ஏற்புரையோடு நிகழ்வு நிறைவடைந்தது. பேரவை உறுப்பினர் சிவப்பிரசாத் அனைவருக்கும் நன்றி கூறினார். நிகழ்ச்சியை மாலன்விளை மகேஸ்வரி தொகுத்து வழங்கினார்.
நிகழ்வில் திரளானோர் கலந்து கொண்டனர்.



