By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பழுதடைந்த சாலையில் புதிய தார் சாலை போடாமல் கிராம மக்களை அலை கழிக்கும் அதிகாரிகள்; டட் நகர் ஊராட்சி கிராம மக்கள் வேதனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > விழுப்புரம் > பழுதடைந்த சாலையில் புதிய தார் சாலை போடாமல் கிராம மக்களை அலை கழிக்கும் அதிகாரிகள்; டட் நகர் ஊராட்சி கிராம மக்கள் வேதனை
விழுப்புரம்

பழுதடைந்த சாலையில் புதிய தார் சாலை போடாமல் கிராம மக்களை அலை கழிக்கும் அதிகாரிகள்; டட் நகர் ஊராட்சி கிராம மக்கள் வேதனை

Last updated: August 5, 2025 5:59 pm
August 5, 2025
60 Views
Share
SHARE

விழுப்புரம், ஆகஸ்ட் 5 –

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட டட் நகர் ஊராட்சியில் தார் சாலை போடாமல் அதிகாரிகள் அலை கழிப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் டட் நகர் ஊராட்சியில் பழுதடைந்த சாலையை புதிய சாலை போட்டு தராமல் இருப்பதால் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர் என்று டட் நகர் ஊராட்சி பொதுமக்கள் தெரிவித்தனர்.

மேலும் அவர்கள் கூறுகையில், திருவண்ணாமலை – விழுப்புரம் சாலையில் அமைந்துள்ள மங்களபுரத்தில் இருந்து டட்நகர் பாளையம், டட்நகர், டட் கூடலூர் ஆகிய எங்கள் 3 கிராமத்திற்கும் 2 கி.மீ-ல் பிரதான சாலை உள்ளது. இந்த சாலை பல ஆண்டுகளுக்கு முன்பதாக புதிதாக தார் சாலை போடப்பட்டது பல ஆண்டுகளாக பழுதடைந்த நிலையில் உள்ளது. கடந்த ஓராண்டாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் புதிய தார்சாலை போட்டு தரும்படி கடந்த ஓராண்டாக பல முறை அதிகாரிகளிடம் மனுக்கள் கொடுத்தும் இதுவரை தார் சாலை போடவில்லை. கடந்த ஆறு மாதமாக டெண்டர் விட்டாயிற்று கான்ட்ராக்ட் கொடுத்தாயிற்று விரைவில் தார்சாலை போடப்படும் என்று அதிகாரிகள் ஒவ்வொரு முறையும் பதில் சொல்லுகிறார்கள். ஆனால் இதுவரை தார் சாலை போட்டப்பாடில்லை, புதிய தார் சாலைக்கு உத்தரவு வந்துவிட்டது என்று உத்தரவின் நகலை காட்டுகிறார்களே தவிர சாலையில் அதை பார்க்க முடியவில்லை.

மேலும் இந்த சாலை தான் மூன்று கிராமத்திற்கும் பிரதான சாலை குறிப்பாக சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் தினமும் பள்ளிக்கு சென்று வரும் பிரதான சாலை இதுவே. கடந்த மூன்று மாதமாக கண்டிப்பாக சாலை போடப்படும் என்று உறுதி அளிக்கிறார்களே தவிர இதுவரை அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சினிமாவில் வடிவேலு சொல்வது போல் வரும் ஆனால் வராது என்ற பாணியில் எங்கள் கிராமத்தின் தார் சாலையின் நிலைமை இருக்கிறது.

கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் அனைவரும் இந்த தரமற்ற சாலையினால் சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர். விரைவில் மழைக்காலம் ஆரம்பிக்க உள்ளது. மீண்டும் மழைக்காலத்தை காரணம் சொல்லி இன்னும் எத்தனை மாதம் கடத்துவார்களோ என்று டட் நகர் கிராம பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர். மேலும் இனியும் காலம் தாமதிக்காமல் தார்சாலை போட்டு தரும்படி அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

திருவெண்ணெய்நல்லூர் அருகே புரட்சி பாரதம் கட்சி நிர்வாகி திருமண வரவேற்பு விழா
ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு அரசால் வழங்கப்படும் ஊட்டசத்து மிக்க உணவுகளை வழங்கிட வேண்டும்; அங்கன்வாடி ஊழியர்களுக்கு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்
திருவெண்ணெய்நல்லூரில் திமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம்
“நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டம்; பொதுமக்கள் நன்றி
திருவெண்ணெய்நல்லூர் அருகே உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதென்காசி

ஊத்துமலையில் சட்டமன்ற உறுப்பினர் கிளை அலுவலகம் திறப்பு: இணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலை பங்கேற்பு

June 16, 2026
23 Views
வணிகர்கள் ஓட்டு யாருக்கு வணிக சங்கத் தலைவர் விக்ரமராஜா
கேட்ட வரம் தரும் கோட்டார் புனித சவேரியார் ஆலய 10 நாள் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள்
2024 ஆம் ஆண்டில் சுமார் 60,900 விபத்துகள்: 18,500 பேர் உயிரிழப்பு: எஸ்.பி.ஸ்டாலின் தகவல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account