திருவெண்ணெய்நல்லூர், செப். 03 –
திருவெண்ணெய்நல்லூர் அருகே உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம் நடைபெற்றது. திருவெண்ணெய்நல்லூர் அருகே திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அருங்குருக்கை கிராமத்தில் டி.எடப்பாளையம், டி.கொணலவாடி, அருங்குருக்கை ஆகிய ஊராட்சிகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.பி. பொன் கௌதம சிகாமணி, ஆர்.டி.ஓ. முருகேசன், ஒன்றிய சேர்மன் ஓம்சிவசக்திவேல், மாவட்ட கவுன்சிலர் பி.வி.ஆர். விசுவநாதன், பி.டி.ஒ. முல்லை ஆகியோர் முன்னிலை வகித்தனர். பி.டி.ஓ. பாலசுப்பிரமணியன் அனைவரையும் வரவேற்றார்.
முகாமில் முன்னாள் அமைச்சர் பொன்முடி எம்எல்ஏ கலந்துகொண்டு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, பட்டா பெயர் மாற்றம், மின் இணைப்பு பெயர் மாற்றம், ரேஷன் கார்டு உள்ளிட்ட 15 துறைகள் சார்ந்த பொது மக்களிடம் இருந்து மனுக்கள் பெற்று முகாமை துவக்கி வைத்தார். அப்போது பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி தீர்வாக பட்டா பெயர் மாற்றம், ரேஷன் கார்டு, ஊட்டச்சத்து பெட்டகம் ஆகியவற்றை பொது மக்களுக்கு வழங்கினார். இதில் துறை சார்ந்த அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.



