காளையார் கோவில், அக். 10 –
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஒன்றியம் சிரமம் ஊராட்சிக்குட்பட்ட சேம்பார் கிராமத்தில் அமைந்துள்ளது புனித சலேத் மாதா கோவில். இக்கோவில் கட்டடம் பழுதடைந்திருந்த நிலைமையில் இருப்பதால் புதிதாக கோவில் கட்டடம் கட்டுவதற்கான திட்ட வரையறை வகுக்கப்பட்டது. இந்நிலையில் புதியதாக கட்டப்படவுள்ள புனித சலேத் மாதா கோவிலுக்கான அடிக்கல் நாட்டு விழாவானது சிவகங்கை மறை மாவட்ட ஆயர் ஆனந்தன், காளையார்கோவில் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் யோக கிருஷ்ணகுமார் ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் சிரமம் ஊராட்சி மன்ற மேனாள் தலைவர் ராஜகோபால் மற்றும் சேம்பார் திமுக கிளை கழக செயலாளர் தைனிஸ் ராஜ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



