திருவெண்ணெய்நல்லூர், ஆக. 15 –
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி அலுவலகத்தில் 79-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் பேரூராட்சி மன்ற தலைவர் அஞ்சுகம் கணேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அலுவலக ஊழியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்பித்தார்.
அதனைத் தொடர்ந்து அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய கொடியை ஏற்றி வைத்து பள்ளி மாணவிகளுக்கு இனிப்புகள் வணங்கி சிறப்புரையாற்றினார். இதில் நகர செயலாளரும், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவருமான பூக்கடை கணேசன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ஜோதி, பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தரி, இளநிலை உதவியாளர் பாலமுருகன் உள்ளிட்ட பேரூராட்சி கவுன்சிலர்கள் அலுவலக ஊழியர்கள், தூய்மை பணியாளர் பலர் கலந்து கொண்டனர்.



