பணகுடி, பிப். 25 –
பணகுடி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரியில், வாக்காளர் விழிப்புணர்வு முகாம் “எனது ஓட்டு எனது உரிமை” எனும் தலைப்பில் நடைபெற்றது. நிகழ்வில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் திலகா வரவேற்புரை வழங்கினார். கல்லூரி முதல்வர் நீல மாதவன் தலைமையுரை ஆற்றினார்.
தொடர்ந்து வணிகவியல் துறை உதவிப் பேராசிரியர் மோகன்ராஜ், அப்துல் காதர் ஆகியோர் வாக்களிப்பதன் முக்கியத்துவம் மற்றும் அதன் உரிமைகள் குறித்தச் செய்திகளை மாணவர்கள் புரியும்படி எடுத்துரைத்தார்கள். இறுதியில் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் தெய்வ ஜெயஜோதி நன்றியுரை கூறினார். இகழ்வினைத் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் ரேணுகா தொகுத்து வழங்கினார்.
இந்நிகழ்வில் கல்லூரிப் பேராசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டு பயன்பெற்றனர். நிகழ்வின் முடிவில் நாட்டு நலப்பணித் திட்ட ஏழு நாள் சிறப்பு முகாமில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்வினை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் திலகர் ஒருங்கிணைத்திருந்தார்.



