மதுரை, ஆக. 23 –
மதுரை மாவட்டம் சக்குடி கல்யாணி மெட்ரிகுலேஷன் பள்ளியில் தேசிய புத்தக கண்காட்சி திறப்பு விழா மற்றும் விற்பனை விழா நடைபெற்றது. இவ்விழாவில் நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா, சக்குடி கல்யாணி மெட்ரிகுலேஷன் பள்ளி மற்றும் தினதமிழ் நாளிதழ், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் இணைந்து நடத்திய இக்கண்காட்சியை கல்யாணி மெட்ரிகுலேஷன் பள்ளி நிறுவனர் பொ. திருப்பதி மற்றும் பள்ளி தாளாளர் பொ. கோபாலகிருஷ்ணன் ஆகியோர் துவக்கி வைத்தனர். இக்கண்காட்சியில் பள்ளி மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் பிரபல எழுத்தாளர்களின் படைப்புகள் மற்றும் நூல்கள் இடம் பெற்றன. இப்புத்தக கண்காட்சியை பள்ளி மாணவ, மாணவிகள் கண்டு மகிழ்ந்தனர்.



