நாகர்கோவில், செப்டம்பர் 13 –
நாகர்கோவில், வடசேரி பகுதியில் மாதாந்திர மின் பராமரிப்பு பணியின் போது புத்தேரி சி.பி.ஹெச் மருத்துவமனை அருகில் உள்ள மின்கம்பத்தில் பணியில் இருந்த போது உடன்குடியை சேர்ந்த கேங்மேன் சுரேஷ் (32) என்ற வாலிபர் மின்கம்பத்தில் தொங்கியவாறு திடீர் என இறந்தார். மின்சாரம் தாக்கி பலியானாரா அல்லது மாரடைப்பு ஏற்பட்டு பலியானாரா என்பது குறித்து வடசேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் உடலை மின் ஊழியர்கள் மின்கம்பத்தில் இருந்து இறக்கினர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி உடலை உடல்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.



