தருமபுரி, செப்டம்பர் 12 –
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ அம்பிகா பரமேஸ்வரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சியாக நடைபெற்றது. இவ்விழாவையொட்டி புதன்கிழமை 3/9/2025 கொடியேற்றுதல் நிகழ்ச்சியை தொடர்ந்து ழுளைப்பாலிகை இடுதல், காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை 9/9/2025 கணபதி ஹோமம், தீர்த்த குடம், பால்குடம், ழுளைப்பாலிகை அழைத்து பம்பை, மங்கள வாத்தியத்துடன் ஊர்வலமாக சென்று அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
புதன்கிழமை 10/9/2025 மங்கள இசை, யாகசாலை பிரவேசம், ஸ்ரீ முப்பெரும் தேவிகள் முதற்கால யாக பூஜை, மகா தீபாரதனை நடைபெற்றது. வியாழக்கிழமை 11/9/2025 மங்கள இசை, பூர் வாங்க பூஜை, முப்பெரும் தேவர்கள் இரண்டாம் காலயாக பூஜை, தீபாரதனை நடைபெற்றது. திருக்குடம் புறப்பாடு, சக்தி கலசங்கள் ஆலய வலம் வருதல், ஸ்ரீ அம்பிகேஸ்வரி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். வியாழக்கிழமை 30/9/2025 108 சங்கு பூஜை, ஸ்ரீ லலிதா ஹோமம் நடைபெறுகிறது. இவ்விழாவிற்கான ஏற்பாட்டினை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.



