தேனி, ஏப். 28 –
தேனி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில வீரபாண்டி அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோயிலில் நடைபெற உள்ள சித்திரைப் பெருந்திருவிழாவை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் தலைமையேற்று, திருவிழா ஏற்பாடுகள், பாதுகாப்பு நடவடிக்கைகள், போக்குவரத்து வசதிகள் மற்றும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
திருவிழா சிறப்பாகவும், பாதுகாப்பாகவும் நடைபெற தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.



