புதுக்கடை, ஏப். 3 –
தொல்காப்பியர் விழாவுக்கான ஆலோசனை கூட்டம் காப்புக்காட்டில் தொல்காப்பியர் கழக தலைவர் மு.பாஸ்கரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. ஆசிரியை புஷ்பலதா தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினார். வணிக வரித் துறையின் பணி நிறை ஆய்வாளர் கோவிந்தராஜ், துணைத் தலைவர் சுரேஷ், இணைச் செயலாளர் சஞ்சய் ஷாலஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் சஜீவ் அனைவரையும் வரவேற்றார். இணைச் செயலாளர் புலவர் கு. இரவீந்திரன் ‘தொல்காப்பியம்’ என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
காஞ்சி நகர், ஸ்ரீ கிருஷ்ணா ஹிந்து வித்யாலயா மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவி தாரிகா தொல்காப்பியத்தில் காணப்படும் அறிவியல் சிந்தனைகள் குறித்து பேசினார். புதுக்கடை பேரூராட்சியின் முன்னாள் தலைவர் மோகனகுமார், உலகத் திருக்குறள் கூட்டமைப்பின் துணைச் செயலாளர் ஷோபா, பி.எஸ்.என்.எல். பொறியாளர் மூர்த்தி, அம்பை தமிழ் இலக்கியப் பேரவைத் தலைவர் ஐயப்பன், தூத்துக்குடி துறைமுகக் கழக பொறுப்பாளர் கேப்டன் பென்னட் சிங், பணி நிறை தலைமை ஆசிரியர் கிருஷ்ணதாஸ், பேபி, ரெஜி கலா ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
கூட்டத்தில் தொல்காப்பியர் பிறந்த தினமான மே மாதம் 1ம் தேதி நடைபெறும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கான போட்டிகள் குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்பட்டது. ஓவியப் போட்டி, பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, வினாடி வினாப் போட்டிகள் நடத்தவும், மிகச்சிறந்த தமிழறிஞர்கள் இருவருக்கு விருது வழங்கியும் கொண்டாட முடிவு செய்யப்பட்டது. பொருளாளர் ரெவிந்திரன் அனைவருக்கும் நன்றி கூறினார்.



