பரமக்குடி,டிச.16 : பரமக்குடியில் தேவேந்திரகுல சங்கங்களில் வட்டார ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று தேவேந்திரன் பண்பாட்டு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பரமக்குடி போகலூர், முதுகுளத்தூர் சாயல்குடி கடலாடி பார்த்திபனூர் திருவாடனை உள்ளிட்ட 13 வட்டார சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், சுதந்திர போராட்ட தியாகி இமானுவேல் சேகரனுக்கு பரமக்குடியில் மணிமண்டபம் கட்டுவதை தடுக்க வழக்கு தொடர்ந்ததை கண்டித்தும், தென் தமிழகத்தில் தொடர்ந்து சாதிய வன்கொடுமை மற்றும் தொடர் சாதிய ரீதியான படுகொலையை நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வருகிற 23ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்ட தேவேந்திரகுல சங்கங்கள் இணைந்து போராட்டம் நடத்தப்படும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.



