நாகர்கோவில், ஜூலை 6 –
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்
கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட மாநகராட்சி, அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் உள்ளாட்சிகளுக்குட்பட்ட பகுதிகளை தூய்மையாகவும், முழு சுகாதாரத்துடன் பேணி பாதுகாப்பதில் தூய்மை பணியாளர்களை பாராட்டும் நிகழ்ச்சி நடந்தது. தமிழ்நாடு அரசு தூய்மை பணியாளர்களுக்கு தற்காப்பு உபகரணங்கள், காலை உணவு என பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறது.
அதனடிப்படையில் நாகர்கோவில் மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியில் ஈடுப்பட்டு வரும் சாரதா என்பவர் கொட்டும் மழையிலும் தனது தூய்மை பணியினை மேற்கொண்டது பொதுமக்களின் பாராட்டுக்களை பெற்றுள்ளார்கள். அவர்களது இந்த உன்னதாமான பணியினை சிறப்பிக்கும் வகையில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அவருக்கு பரிசுப்பொருட்கள் மற்றும் பொன்னாடை போர்த்தி மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் கெளரவித்தார்.
நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அ.பூங்கோதை, உதவி ஆட்சியர் பயிற்சி மோனிகா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோணி பெர்னான்டோ, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் சுகிதா (பொது), பத்மபிரியா (நிலம்), நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் எஸ்.காளீஸ்வரி, மாநகராட்சி நகர்நல அலுவலர் மரு.சரோஜா, துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



