புதுக்கடை, ஜூலை 2 –
பாலூர் பகுதியை சேர்ந்தவர் நாராயணன் குட்டி மனைவி ஸ்ரீஜா(43). இவர் சம்பவ தினம் தனக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் தனது மகள் அக்ஷரா (21) என்பவர் உடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். ஸ்ரீஜா பைக்கை ஓட்ட அக்ஷரா பின்னால் அமர்ந்து இருந்தார். அப்போது ஒளிபாறை என்ற பகுதியில் வரும் போது எதிரில் வந்த இருசக்கர வாகனம் ஒன்று அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஒட்டி வந்து ஸ்ரீஜா ஓட்டிய பைக்கில் மோதி தள்ளிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் தூக்கி வீசப்பட்ட ஸ்ரீஜா மற்றும் அக்ஷரா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மார்த்தாண்ட அருகே காஞ்சிரகோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இது குறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற பைக் குறித்து விசாரித்து வருகின்றனர்.


