திருச்சி, மே 1 –
திண்டுக்கல் மாவட்டம் குரும்பபட்டியைச் சேர்ந்த பாண்டியன், துவரங்குறிச்சி அரசு போக்குவரத்து பணிமனையில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்தார். நேற்று (ஏப்ரல் 30) துவரங்குறிச்சி பேருந்து நிலையத்தில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, அரசு பேருந்து ஒன்று அவர் மீது மோதியது. இதில் பேருந்தின் பின்பக்க டயர் அவர் உடல் மீது ஏறியதில், தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். துவரங்குறிச்சி போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



