திருச்சி, ஏப். 22 –
துறையூர் அருகே ரெட்டியார்பட்டியைச் சேர்ந்த ஷாலினி (25) என்பவர், வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த பொன்னாரைக் காதலித்து ஓராண்டுக்கு முன் திருமணம் செய்துகொண்டார். பொன்னார் திருச்சியில் ஹோட்டலில் பணிபுரிகிறார்.
நேற்று பொன்னாரின் தாய் வெள்ளையம்மாள் விவசாயப் பணிக்காக வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, ஷாலினி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார். புளியங்குளம் போலீஸார் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



