நாகர்கோவில், மார்ச் 16 –
சட்டமன்ற தேர்தலையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து எம்எல்ஏ அலுவலகங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் அரசு வாகனங்கள் மற்றும் கட்டிடங்களை பயன்படுத்துவது குறித்து தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளான எம்எல்ஏ மற்றும் எம்பிக்களின் அலுவலகங்கள் உடனடியாக பூட்டப்பட்டு அதன் சாவிகள் பொதுப்பணித்துறை இடம் ஒப்படைக்கப்பட வேண்டும். தேர்தல் பிரச்சாரத்திற்காக அரசு வாகனங்களை பயன்படுத்த முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதிகள் மற்றும் வாரிய தலைவர்கள் வசம் உள்ள அரசு வாகனங்கள் உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
அரசு விருந்தினர் மாளிகைகளை அரசியல் கட்சியினர் எவரும் தங்குவதற்கு அல்லது ஆலோசனைக் கூட்டங்கள் நடத்துவதற்கு பயன்படுத்தக்கூடாது. நகராட்சிகள் மட்டும் பஞ்சாயத்து அமைப்புகளுக்கு சொந்தமான வாகனங்களும் இந்த கட்டுப்பாடுகள் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குமரியில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ தொகுதி எம்எல்ஏக்கள் அலுவலகம் அதிகாரிகளால் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.


