மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இராமேஸ்வரம் – பாம்பன் பகுதியைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கும் பொழுது ஏற்பட்ட திடீர் விபத்தில் இறந்ததையொட்டி, முதலமைச்சர் பொதுநிவாரண நிதியின் கீழ் தலா ரூ.3,00,000/-ம் வழங்க உத்தரவிட்டதையொட்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் .பா.விஷ்ணு சந்திரன்,இ.ஆ.ப., அவர்கள் மற்றும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் .காதர்பாட்சா முத்துராமலிங்கம் அவர்கள் ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்குச் சென்று நிவாரண நிதியுதவிக்கான காசோலையினை வழங்கினார்கள்.



