தர்பூஸ் விவசாயி இளம் வயது அர்சுதன் மானியத்தில் மெல்சிங் சீட் வேண்டி.
மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை .
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் குளிர்பானங்களைத் தேடி செல்கின்றனர் அந்த வகையில் மே மாதத்தில் அதிக அளவில் விற்பனையாகும் தர்பூசணி தற்பொழுது அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் தர்பூசணி விவசாயம் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த பெரியாகவுண்டனூர் கிராமத்தை விவசாயி அர்சுதன் கூறியது. முக்கால் ஏக்கர் தர்பூசணி மெலோடின் காய் விவசாயம் செய்துள்ளேன், இந்த ஆண்டு அதிக மகசூல் மட்டுமல்லாமல் ஒரு கிலோ பதினோரு ரூபாய் என்பதால் ஒரு டன் 11 ஆயிரம் விலை
போகிறது, முக்கால்
ஏக்கருக்கு 10 முதல் 15 டன் வரை விளைச்சல் இருக்கும் எனவும்
பாதிக்கு பாதி லாபம் கிடைக்கும் எனவும் மூன்று மகசூல் செய்யலாம், மானியத்தில் மெல்சிங் சீட் கிடைத்திருந்தால் இன்னும் அதிக இலாபம் கிடைத்திருக்கும் என்றும் மகிழ்ச்சியாக தெரிவித்தார்.
குறிப்பு: 27 வயது இளைஞர் விவசாயி அர்சுதன் போன்ற இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் அரசு சார்பில் மானியத்தில் வழங்கும் மெல்சிங் சீட் போன்ற விவசாய பொருட்களை விவசாயிகளுக்கு வழங்கி விவசாயம் செய்ய ஊக்குவிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.



