திருவெண்ணெய்நல்லூர், செப். 20 –
திருவெண்ணெய்நல்லூர் அருகே 8 வகுப்பறைகள் கொண்ட கூடுதல் பள்ளி கட்டிடத்தை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே மணக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நபார்டு நிதி திட்டத்தின் கீழ் ரூ.1 கோடி 88 லட்சம் மதிப்பில் புதிதாய் கட்டப்பட்ட 8 வகுப்பறைகள் கொண்ட கூடுதல் பள்ளி கட்டிடத்தை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். அப்போது மனக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பொன்முடி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு 8 கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
இதில் கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான், ஆர்.டி.ஒ., முருகேசன், மாவட்ட கல்வி அலுவலர் சேகர், ஒன்றிய சேர்மன் ஓம்சிவசக்திவேல், மாவட்ட கவுன்சிலர் பி.வி.ஆர்.விஸ்வநாதன், நகர செயலாளர் பூக்கடை கணேசன், தாசில்தார் செந்தில்குமார், பி.டி.ஒ. பாலசுப்பிரமணியன், ஊராட்சி மன்ற தலைவர் கௌரி கோவிந்தராஜுலு, ஒன்றிய கவுன்சிலர் ஏழுமலை, துணைத் தலைவர் உமா நாவப்பன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் அபிதா முருகவேல் மற்றும் நிர்வாகிகள் பக்தவச்சலம், சடகோபன், சுதா சீனிவாசன், ஏழுமலை, மாதவன், ராஜ்மோகன், விஸ்வநாதன், கிருஷ்ணராஜ், நிர்மல்ராஜ், வெங்கடேசன், குமரவேல், ஆமூர் செந்தில், கிளை செயலாளர்கள் சோமசுந்தரம், கேசவன், சிவஞானம், ஜெயபால், ஜெயராமன், பழனிச்சாமி, முத்து, அன்பழகன், பழனிச்சாமி சரவணன், தல.சித்தா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இறுதியாக பள்ளி தலைமை ஆசிரியர் விஜயபால் நன்றி கூறினார்.



