திருச்சி, ஜூன் 16 –
தமிழகத்தில் 56 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்களாக சிருஷ்டி சிங், செந்தில்குமார் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக பள்ளிக்கரணை துணை ஆணையர் பொன். கார்த்தி குமார் மற்றும் சென்னை ஊழல் மற்றும் கண்காணிப்பு எஸ்பி மணிகண்டன் ஆகியோர் திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.



