குளச்சல், ஜன. 20 –
குருந்தன்கோடு அருகே உள்ள செக்காரவிளை பகுதியை சேர்ந்தவர் பிச்சலிங்கம் மனைவி லலிதா (57). இவர் மைலோடு பகுதியில் உள்ள தனது மகள் வீட்டில் செல்ல திங்கள்நகர் பஸ் நிலையத்தில் பஸ்ஸுக்காக காத்து நின்றார். அப்போது அங்கு வேறு சில பெண்களும் நின்றனர்.
அதில் ஒருவர் லலிதா வைத்திருந்த பையில் இருந்த மணி பர்சை நைசாக திருடினார். அதனை மற்றொரு பெண்ணிடம் கொடுத்துள்ளார். அந்த பெண் மூன்றாவதாக ஒரு பெண்ணிடம் மாற்றி உள்ளனர். இந்த செயலை பொதுமக்கள் கவனித்து விட்டனர். அவர்கள் அந்த 3 பெண்களை மடக்கி பிடித்தனர்.
பின்னர் லலிதா தனது பர்சில் ரூபாய் 23 ஆயிரத்து 700 ரூபாய் வைத்திருந்தது மாயமானதை கண்டார். இதை அடுத்து இரனியல் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 3 பெண்களை கைது செய்தனர்.
அவர்களை போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தியதில் அவர்கள் ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதி சேர்ந்த கிருஷ்ணம்மாள் (60), சுப்பம்மாள் (50), கோழியம்மாள் (51) என்பது தெரிய வந்தது. இதை அடுத்து மூன்று பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.


