By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திக்கணங்கோடு பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்: பேருந்து நிறுத்தங்களை இடமாற்றி ஆக்கிரமிப்புகளை அகற்றி நடவடிக்கை எடுக்க ஆட்சியருக்கு மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > திக்கணங்கோடு பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்: பேருந்து நிறுத்தங்களை இடமாற்றி ஆக்கிரமிப்புகளை அகற்றி நடவடிக்கை எடுக்க ஆட்சியருக்கு மனு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

திக்கணங்கோடு பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்: பேருந்து நிறுத்தங்களை இடமாற்றி ஆக்கிரமிப்புகளை அகற்றி நடவடிக்கை எடுக்க ஆட்சியருக்கு மனு

Last updated: June 24, 2026 5:55 pm
June 24, 2026
13 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 24 –

குமரி மாவட்டம் திக்கணங்கோடு பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் அப்பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணவும், ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவாக்கம் செய்திடவும் பொது நலன் கருதி மாவட்ட ஆட்சியர் மற்றும் நெடுஞ்சாலை துறையினருக்கு மனு அனுப்பி நடவடிக்கை எடுக்க கோரி உள்ளார்.

அவர் அனுப்பிய கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட முக்கியப் பகுதியாக திக்கணங்கோடு விளங்கி வருகிறது. இப்பகுதி பத்மநாபபுரம் மற்றும் கிள்ளியூர் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளின் எல்லையாகவும், மக்கள் அதிகம் கூடும் முதன்மைச் சந்தைப் பகுதியாகவும் அமைந்துள்ளது.

திக்கணங்கோடு சந்திப்பானது, நாற்புறமும் முக்கிய நகரங்களை இணைக்கும் மையப் புள்ளியாக உள்ளது. இங்கிருந்து குளச்சல் 5.4 கி.மீ, கருங்கல் 4.2 கி.மீ, திங்கள்நகர் 4.7 கி.மீ மற்றும் தக்கலை 7.5 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளன. இந்த புவியியல் அமைப்பின் காரணமாக, திக்கணங்கோடு சந்திப்பில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும், நூற்றுக்கணக்கான பேருந்து உள்ளிட்ட வாகனங்களும் கடந்து செல்கின்றன.

தற்போதைய முக்கியப் பிரச்சினைகள்: இப்பகுதியில் தினசரி காலை மற்றும் மாலை வேளைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவியர் மற்றும் வேலைக்குச் செல்வோர் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மிக முக்கியமாக, அவசரச் சிகிச்சைக்காகச் செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட இந்த நெரிசலில் சிக்கித் தவிக்கும் அவல நிலை நீடிக்கிறது. மேலும், இப்பகுதியில் உள்ள திருமண மண்டபங்களில் விசேஷங்கள் நடைபெறும் நாட்களில், சுமார் 1 கி.மீ தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பது தொடர்கதையாகி உள்ளது.

எனவே, திக்கணங்கோடு சந்திப்பில் நிலவும் இந்த மிக முக்கியமான போக்குவரத்துப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் பொருட்டு, பின்வரும் கோரிக்கைகளைத் தங்களின் கனிவான கவனத்திற்குச் சமர்ப்பிக்கிறோம்: கருங்கல் மார்க்கப் பேருந்து நிறுத்தம் மாற்றம்: திக்கணங்கோடு சந்திப்பில் உள்ள கருங்கல் மார்க்கமாகச் செல்லும் பேருந்து நிறுத்தத்தை, தற்போதைய இடத்திலிருந்து சுமார் 50 முதல் 100 மீட்டர் தொலைவிற்கு நகர்த்தி, புதிதாகக் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தின் மேல் பேருந்துகள் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குளச்சல் மார்க்கப் பேருந்து நிறுத்தம் மாற்றம்: அதேபோல், குளச்சல் மார்க்கமாகச் செல்லும் பேருந்து நிறுத்தத்தையும் சுமார் 25 முதல் 40 மீட்டர் தூரம் மாற்றி அமைத்து, பாலத்திற்கு அருகே கொண்டு செல்ல வேண்டும்.

சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றுதல்: திக்கணங்கோடு சந்திப்புச் சாலையின் நாற்புறமும் உள்ள சில வியாபாரிகள், நெடுஞ்சாலைப் பகுதியை ஆக்கிரமித்துக் கடைகளை அமைத்துள்ளனர். எனவே, நெடுஞ்சாலைத் துறை சார்பாகச் சந்திப்பிலிருந்து நான்கு திசைகளிலும் செல்லும் சாலைகளில், சுமார் 100 முதல் 300 மீட்டர் தூரம் வரை உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் உடனடியாக அகற்ற வேண்டும்.

சென்டர் மீடியன் (Center Median) அமைத்தல்: சாலை ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்பட்ட பிறகு, சந்திப்பிலிருந்து நான்கு மார்க்கங்களிலும் சுமார் 100 முதல் 300 மீட்டர் நீளத்திற்குச் சாலையின் நடுவே ‘சென்டர் மீடியன்’ (Center Median – தடுப்புச் சுவர்) அமைத்துத் தர வேண்டும்.

சாலையில் தற்போது உள்ள ஆக்கரமிப்புகளை அகற்ற வியாபாரிகள் ஒத்துழைக்காத பட்சத்தில் போக்குவரத்து நெரிசலை தீர்க்கும் பொருட்டு திக்கணங்கோட்டில் புதிதாக மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால், திக்கணங்கோடு சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் முற்றிலும் குறைந்து, பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்திற்கு வழிவகுக்கும். எனவே, மாவட்ட நிர்வாகமும் நெடுஞ்சாலைத் துறையும் இக்கோரிக்கைகளை உடனே பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

குமரி மாவட்ட குடிநீர் வடிகால் வாரியத்தின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர், அதிகாரிகள் ஆய்வு
கொல்லங்கோடு அருகே ராணுவ வீரர் வீடு புகுந்து தாக்குதல்; மனைவி உட்பட 7 பேர் மீது வழக்கு
மார்த்தாண்டம் அருகே இருசக்கர வாகன மோதி வங்கி பெண் ஊழியர் உட்பட இருவர் படுகாயம்
திருவட்டாறு அருகே குளத்தில் மூழ்கி கொத்தனார் பலி
ஈரோடு தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி 6 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

புனித சவேரியார் நர்சிங் கல்லூரி தாளாளராக அருள்தந்தை டோமினிக் சாவியோ பதவியேற்பு

June 15, 2024
202 Views
தஞ்சாவூரில் ஏடகம் ஞாயிறு முற்றம் சொற்பொழிவு!!
குரூப் 4 பதவிகளுக்கான போட்டித் தேர்வு
தனியார் கல்லூரி பேருந்து சீட்டில் அமர்ந்த நிலையில் ஓட்டுநர் உயிரிழப்பு
ஈரோடு விஇடி கல்லூரியில் நோபல் உலக சாதனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account