தருமபுரி, அக். 9 –
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு தலை நிமிரும் தருமபுரி அகவை 60 வைர விழா கொண்டாட்டங்களை மகளிர் சுய உதவி குழுக்களின் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
பேரணியில் மகளிர் சுய உதவி குழுவினர் கலந்து கொண்டு குழந்தை திருமணம் தடுப்போம், பெண் குழந்தைகளை காப்போம் கற்பிப்போம், மரக்கன்றுகளை நட்டு வளர்ப்போம், பாலின சமத்துவத்தை உறுதி செய்வோம், கருவின் பாலின தேர்வை தடை செய்வோம் இதுபோன்று பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தியவாறு ஊர்வலமாக நான்கு ரோடு வரை சென்றனர். இதில் 50-க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவி குழுவினர் கலந்து கொண்டனர்.



