By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரி ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில் பெட்டியின் அடியில் திடீர் தீ: பயணிகளின் சமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தருமபுரி ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில் பெட்டியின் அடியில் திடீர் தீ: பயணிகளின் சமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு
தமிழ்நாடுதருமபுரி

தருமபுரி ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில் பெட்டியின் அடியில் திடீர் தீ: பயணிகளின் சமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு

Last updated: July 27, 2026 6:41 pm
July 27, 2026
23 Views
Share
SHARE

தருமபுரி, ஜூலை 27 –

தருமபுரி ரயில் நிலையத்தில் பயணிகள் ரயிலின் ஒரு பெட்டியின் அடிப்பகுதியில் திடீரென தீப்பிடித்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பயணிகள் உடனடியாக தகவல் தெரிவித்ததையடுத்து ரயில்வே பாதுகாப்புப் படையினர் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

சேலத்தில் இருந்து தொப்பூர், தருமபுரி, ராயக்கோட்டை, ஓசூர் வழியாக பெங்களூரு செல்லும் பயணிகள் (பேசஞ்சர்) ரயில் தினமும் காலை மற்றும் மாலை என இருவேளை இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பெங்களூருவில் இருந்து சேலம் நோக்கி புறப்பட்ட பயணிகள் ரயில் மாலை சுமார் 7.15 மணியளவில் தருமபுரி ரயில் நிலையத்தின் முதல் நடைமேடையை வந்தடைந்தது. அப்போது ரயிலின் ஐந்தாவது பெட்டியின் அடிப்பகுதியில் இருந்து திடீரென புகையுடன் தீப்பொறிகள் பறந்து தீ எரிவதை சில பயணிகள் கவனித்தனர்.

உடனடியாக இதுகுறித்து ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கும், ரயில்வே ஊழியர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த ரயில்வே பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட ஆய்வில், ரயிலின் சக்கரத்தில் பொருத்தப்பட்டிருந்த பிரேக், சக்கரத்துடன் ஒட்டிக்கொண்டதால் ஏற்பட்ட அதிக உராய்வு காரணமாக ரப்பர் பகுதி தீப்பிடித்து எரிந்தது தெரியவந்தது. பயணிகளின் சாமர்த்தியமும் , ரயில்வே பாதுகாப்புப் படையினரின் விரைவான நடவடிக்கையின் காரணமாக பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.

இந்தச் சம்பவத்தால் ரயில் சுமார் 45 நிமிடங்களுக்கும் மேலாக தருமபுரி ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் பழுது சரி செய்யப்பட்டு பிறகு சேலம் நோக்கி புறப்பட்டு சென்றது. இந்த திடீர் தீ விபத்து காரணமாக தருமபுரி ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் மாவட்டத்தில் 10, 12ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டுதல் பயிற்சி: தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்பு
திருச்சி: பாம்பு கடித்து சிறுவன் பலி
தருமபுரி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் பயிற்சி பட்டறை
தஞ்சாவூர் மாநகராட்சி பகுதிகளில் துணை மேயர் ஆய்வு செய்து குறைகளை கேட்டார்
பாசம் ஃபவுண்டேஷனில் நிதி முறைகேடு புகார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மார்த்தாண்டம் அருகே பெண் நடன கலைஞரை திருமணம் செய்து கொள்ளவதாக கர்ப்பமாக்கிய இன்ஜினியர் கைது

January 16, 2026
127 Views
50 விஷேச பஸ்கள்போக்குவரத்து அதிகாரி தகவல்
தேனியில் ரூ.60 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் மருத்துவமனை கட்டிடத்தை முதலமைச்சர் காணொளிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்
தமிழர் திருநாளான தைப்பொங்கலை கொண்டாடும்
கடை அடைப்பு போராட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account