சென்னை, மே 2 –
டாடா குழுமத்தின் ஜுவல்லரி ரீடெய்ல் பிராண்டான தனிஷ்க் சென்னை மேற்கு தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் புதிய விற்பனை நிலையத்தைத் தொடங்கியுள்ளது. இதன் மூலம், தமிழ்நாட்டில் தனிஷ்க் நிறுவனத்தின் 66-வது விற்பனை நிலையம் என்ற ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.
இப்புதிய விற்பனை நிலையத்தை டைட்டன் நிறுவனத்தின் ஜுவல்லரி பிரிவின் தலைமை செயல் அதிகாரி அருண் நாராயண் மற்றும் தமிழ்நாடு & கேரளா ஜுவல்லரி பிரிவின் பிசினஸ் ஹெட் நரசிம்மன் ஆகியோர், தனிஷ்க் நிறுவனப் பிரதிநிதிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் முன்னிலையில் திறப்பு விழா நடைபெற்றது.
மேற்கு தாம்பரத்தில் புதிதாக அறிமுகமாகும் இந்த புதிய விற்பனை நிலையத்தின் தொடக்கத்தை கொண்டாடும் வகையில், தனிஷ்க் ஒரு பிரத்தியேக அறிமுகச் சலுகையை அறிவித்துள்ளது. இதன்படி, வாடிக்கையாளர்கள் வாங்கும் நகைகளுக்கு தங்க நாணயத்தை அறிமுக சலுகையாகப் பெறலாம். இந்தச் சலுகை மே 1 முதல் மே 3, 2026 வரை மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், திறப்பு விழா குறித்து டைட்டன் நிறுவனத்தின் ஜுவல்லரி பிரிவு தலைமை செயல் அதிகாரி அருண் நாராயண் கூறுகையில்: “இந்த விற்பனை நிலையத்தில் தனிஷ்க் டைமண்ட் எக்ஸ்பர்டைஸ் சென்டர் இடம் பெற்று உள்ளது. இது வைரங்களின் உண்மைத்தன்மை, அதன் அசல் வகை மற்றும் ஜொலிக்கும் தரம் ஆகியவற்றை வாடிக்கையாளர்கள் சரிபார்க்க உதவும் ஒரு தொழில்நுட்ப முயற்சியாகும். தொழில்நுட்பத்தினால் மிகவும் மேம்பட்ட ஐந்து கருவிகளைக் கொண்டிருக்கும் தனிஷ்க் டைமண்ட் எக்ஸ்பர்டைஸ் சென்டர் மூலம் வைரத்தின் உயர்தரம், ஒளிரும் திறன் மற்றும் லேசர் மார்க்கிங் போன்ற முக்கிய அம்சங்களை மதிப்பீடு செய்யலாம்” என்று தெரிவித்தார்.
சர்க்கிள் பிசினஸ் மேனேஜர் திரு. தினேஷ் குமார் பேசுகையில்: “எங்களது தயாரிப்புகளை வாடிக்கையாளர்களுக்கு மிக எளிதாகக் கிடைக்கச் செய்வதற்கான தொடர்ச்சியான முயற்சியின் ஒரு பகுதியாக இந்த மைல்கல் விரிவாக்கம் அமைந்துள்ளது. வாடிக்கையாளர்களின் மாறிவரும் ரசனைக்கேற்ப பல்வேறு வகைகளிலான, மிக நுணுக்கமான, கைவினைத் திறன்மிக்க வடிவமைப்புகளைத் தேர்ந்தெடுக்கும் வகையில் இந்த விற்பனை நிலையம் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது” என்றார்.



