இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகா நல்லிருக்கை கிராமத்தில் 15/10/2024 மான் ஒன்று நாய்களால் விரட்டப்பட்டு வழி தடுமாறி ஊருக்குள் வந்தது. ஊருக்குள் வந்த மானை காயங்களுடன் நாய்களிமிருந்து பாதுகாத்து உயிருடன் கிராம மக்கள் மீட்ட நிலையில் திடீரென மயங்கி உடலசைவு ஏதும் இல்லாமல் இருந்தது. மானை பரிசோதனை செய்த கால்நடை மருத்துவர் மான் இறந்து விட்டதாக கூறினார். இறந்த மானை வனத்துறை அலுவலர் மற்றும் கிராம மக்கள் உதவியுடன் புதைக்கப்பட்டது.



