தஞ்சாவூர், ஏப்ரல் 20 –
தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி நீச்சல் வீரர் வீராங்கனைகள் பயிற்சி மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 23ம் தேதி வியாழக்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி மாவட்ட நிர்வாக சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு தனியார் அமைப்புகள் சார்பிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி தமிழ்நாடு விளையாட் டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தேர்தல் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் உள்ள குந்தவை நீச்சல் குளத்தில் 100க்கும் மேற்பட்ட நீச்சல் வீரர், வீராங்கனைகள் தேர்தல் நாள் அன்று அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி நீச்சல் பயிற்சி மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் செந்தில்குமார், நீச்சல் பயிற்சியாளர் ரஞ்சித் குமார் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.



