தஞ்சாவூர், ஏப்ரல் 27 –
தஞ்சாவூர் அடுத்துள்ள கரந்தை சத்ய நாராயண சித்தர் ஆசிரமத் தில் மாதந்தோறும் நடைபெறும் வழிபாட்டு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. வழிபாட்டு குழு தலைவர் யோகம் செழியன் தலைமையில் நடைபெற்றது. விழாவில் திருபுவனம் ஆதிசக்தி பீடம் நிறுவனர் அருள் கண்ணன் அடிகள் ஆசி உரை வழங்கினார். கண் மருத்துவர் சிவ விக்னேஷ் முன்னிலை உரையாற்றினார்.
நிகழ்வில் சுந்தரி செழியன், கோவை பால ரிஷி பீடம் நிறுவனர் பாலரிஷி மற்றும் மதுக்கூர் ராஜ சேகர், சித்தர் கண்ணன் அடிகள் ஆகியோருடன் தனக்கு ஏற்பட்ட அனுபவ பதிவுகளை உரையாற்றினார். விழாவில் தென்னங்குடி சண்முகசுந்தரம், ஆண்டிமடம் ரேவதி சத்ய நாராயணன், பேராசிரியர் கஸ்தூரி நாகராஜன், விமலா ராமதாஸ் புருஷோத்தமன், மதுரை கோவிந்த ராம், இயக்குனர் மணிவாசகன், திருவேதுகுடி பாலதுரை அரசன், திருவையாறு கலைச்செல்வன், சுப்பிரமணியம் வடுவூர் மணிபாலா வழக்கறிஞர் சுந்தர் ஆசிரியர் அமர்நாத், பேராசிரியர் பாலகிருஷ்ணன் புவனேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
விழாவினை திருச்சி வானொலி நிலைய செய்தி வாசிப்பாளர் ஜெய் கீதா தொகுத்து வழங்கினார். நிறைவில் ஆயில்ய வழிபாட்டுக் குழு செயலாளர் கவிஞர் ராகவ் மகேஷ் நன்றி கூறினார்.



