ஈரோடு, ஏப். 17 –
மத்திய அரசின் உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொள்வதற்காக நாளை 19 ந் தேதி ஈரோடு மாவட்டத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் வருகை புரிந்து தேர்தல் பிரச்சார நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளார்.
இதனையொட்டி உள்துறை அமைச்சர் ஹெலிகாப்டரில் வந்திறங்கும் ஈரோடு மாவட்டம் கொடுமுடி வட்டம் தாமரைப்பாளையம், தாமரை மெட்ரிகுலேசன் பள்ளி மைதானம் மற்றும் பள்ளி மைதானத்திலிருந்து சிவகிரி செல்லும் வழிகளில் 2 கி.மீ. சுற்றளவிற்குள் ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது.
தடையை மீறி ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது காவல்துறை மூலம் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்து உள்ளார்.


