தஞ்சாவூர், ஜூன் 30 –
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) தியாகராஜன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 543 மனுக்கள் வந்தன. இந்த மனுக்கள் மீது உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தொடர்புடைய அலுவலர்களுக்கு கலெக்டர் பொறுப்பு தியாகராஜன் உத்தரவிட்டார்.
மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 5 மாற்று திறனாளிகளுக்கு ரூபாய் 3,500 மதிப்பில் காதொலிக் கருவிகளும், ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூபாய் 16 ஆயிரம் மதிப்பில் காமோடோ சக்கர நாற்காலியும் வழங்கப்பட்டன. இக்கூட்டத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் சௌமியா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



