கோவை, ஜூன் 20 –
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 மக்கள் தீர்ப்பிற்கு பிறகு அனைத்து கட்சியிலிருந்தும் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் தவெகவில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் அதிமுக முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் பொள்ளாச்சியில் பல்வேறு ஆலயங்களுக்கு அன்னதானம் வழங்கியும், ஏழை எளிய மாணவர்களுக்கு தொடர்ந்து கல்விக்காக பல்வேறு உதவிகளை செய்தி வரும் பொள்ளாச்சி மின்னல் சீனிவாசன் சென்னை தலைமையகத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் அவர்களின் தலைமையில் தன்னை கட்சியில் இணைத்துக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் செங்கோட்டையின் மற்றும் விக்னேஷ் ஆகியோரிடம் நேரில் சென்று வாழ்த்து பெற்றார். புதிதாக இணைந்த மின்னல் சீனிவாசன் அவர்களுக்கு கட்சி நிர்வாகிகள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.



