ராமநாதபுரம், நவ. 6 –
ராமநாதபுரம் கல்வித்தந்தை டாக்டர் இ. எம். அப்துல்லா நினைவு குருதிக்கொடை பாசறை மூலமாக உயிருக்கு போராடும் நோயாளிகளுக்கு உதிரம் கிடைக்கும் வகையில் ஜாதி, மதம் பாராமல் தொடர்ச்சியாக இரத்ததான சேவை செய்வதை பாராட்டி ராமநாதபுரம் அரசு மருத்து கல்லூரி மருத்துவமனையில் தேசிய தன்னார்வ இரத்ததான விருது வழங்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சி தலைவர் சிம்ரன் ஜீத்சிங் காலோன், ராமநாதபுரம் மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் அமுதாராணி, ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கண்காணிப்பாளர் நூர் முகமது உட்பட பலர் பாராட்டி விருதினை வழங்கினர்.
கல்வித் தந்தை டாக்டர் இ. எம். அப்துல்லா நினைவு குருதிக்கொடை பாசறையின்
மதுரை மாவட்ட இரத்தான ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் அஜிஸ் ரஹ்மான், சமூக ஆர்வலர் அப்துல் ஹமீது மற்றும் கல்வித்தந்தை மருத்துவர் இ எம் அப்துல்லா குருதிக்கொடை பாசறையின் ராமநாதபுரம் ஒருங்கிணைப்பாளர் பாதுஷா நூருல் சமது கலந்து கொண்டனர்.



