புதுப்பாக்கம், செப். 12 –
செங்கல்பட்டு மாவட்டம் புதுப்பாக்கத்தில் அமைந்துள்ள சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் சமகால சட்ட சிக்கல்களும் மற்றும் அதன் வளர்ந்து வரும் போக்குகளும் என்ற தலைப்பில் 12/9/2025 முதல் 14 /9/ 2005 வரை நடைபெறும் மூன்று நாள் சர்வதேச பயிற்சி பட்டறையினை தமிழக சட்டத்துறை செயலாளர் ஜார்ஜ் அலெக்சாண்டர் பங்கேற்று துவக்கி வைத்தார் அதன் பின்னர் தமிழக அரசு சட்ட மாணவர்களுக்காக செய்கின்ற முன்னெடுப்புகள் பற்றியும் தமிழ்நாடு சட்டத்துறை அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் அறிவு மேம்பாட்டிற்காக சர்வதேச தரத்தில் பல பயிற்சிகளை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது என்று தெரிவித்தார்.
இந்த கருத்தரங்கில் தமிழகத்தில் உள்ள 15 அரசு சட்ட கல்லூரியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 300 மாணவ மாணவியர்கள் இப்பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டனர். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து சட்ட அறிஞர்களும் வல்லுநர்கள் மற்றும் பேராசிரியர்களும் மற்றும் உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதி அரசார்களும் கலந்து கொண்டு இப்பயிற்சி பட்டறையில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளனர்.
மேலும் வளர்ந்து வரும் சுழலில் சட்டத்தின் பங்கு மிக முக்கியம் என்பதால் சட்டக் கல்லூரி மாணவர்கள் அதற்கேற்றார் போல சட்ட நுணுக்கங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் உயரிய நோக்கத்தோடு அரசு பயிற்சி பட்டறை நடத்தப்படுவதாக சட்டத்துறை செயலாளர் தனது உரையில் தெரிவித்தார். தமிழ்நாடு சட்டக் கல்வி இயக்குனரும் பயிற்சி பட்டறை தலைமை புரவலருமான பேராசிரியர் முனைவர் ஜே விஜயலட்சுமி நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றினார்.
மேலும் பயிற்சி பட்டறைக்கு முதல் வகுப்பாக அரசியலமைப்பு கூட்டாட்சி மற்றும் நீதித்துறையை வலுப்படுத்துவதில் வக்காலத்து வாங்கலின் பங்கு பற்றி நீதி அரசர் சஞ்சிப் பானர்ஜி மாணவர்களுக்கு விளக்கினார் இந்த நிகழ்ச்சிக்கு திருச்சிராப்பள்ளி அரசு சட்டக் கல்லூரி முதல்வர் பேராசிரியர் முனைவர் ராஜேஸ்வரன், ராமநாதபுரம் அரசு சட்டக் கல்லூரி முதல்வர் பேராசிரியர் முனைவர் ஜேம்ஸ் ஜெயபால், நீ பயிற்சி பட்டறை புரவலர் குழு உறுப்பினர்களான சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி புதுபாக்கத்தின் முதல்வர் பேராசிரியர் முனைவர் ஜி. ஜெயா கௌரி, தர்மபுரி அரசு சட்டக் கல்லூரி முதல்வர் பேராசிரியர் முனைவர் உஷா, நாமக்கல் அரசு சட்டக் கல்லூரி முதல்வர் பேராசிரியர் முனைவர் அருள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



